ஒரு படைப்பை மொழிபெயர்க்கும்போது ஒரு மொழியில் ஒரு படைப்பாளி நெய்து வைத்ததைப் பிரித்து மீண்டும் நெய்கிறார் மொழிபெயர்ப்பாளர். அதன் முடிவில் கிடைப்பது மூலத்தின் நகலா? புதிதான ஒன்றா? இரண்டுக்குமே இல்லை என்ற பதிலைத்தான் கூற வேண்டியிருக்கும். மொழியின் மங்கலான, தெளிவற்ற புலத்தில் செயல்படுகிறது மொழிபெயர்ப்பு.
உலகின் வேறுபட்ட நாடுகளை, கலாச்சாரங்களைச் சேர்ந்த பதினொரு பெண்கள் எழுதிய சிறுகதைகள் இங்கே மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கண்ணீரை, புன்னகையை, வேட்கையை - மொழியின், நாட்டின் எல்லைக்கோடுகள் பிரித்துவைக்க முடியாது என்பதை எடுத்துக்காட்டுகின்றன இந்தக் கதைகள்.