இந்த நூலில் சைவம், அசைவம், என இருதரப்பினருக்கும் சரிசமமாய் ருசிகர பந்தி பரிமாறியிருக்கிறார் திருமதி. அமலோற்பவ மேரி டி'சாமி. இனிப்பில் தொடங்கி, பலகாரம், சாதம், வறுவல் எனப் பயணித்து ஊறுகாய் வரையிலான செய்முறைகளை அம்மாவின் நேசத்துடனும் பரிவுடனும் நூலாசிரியர் விவரிப்பதை படிப்பதே ஓர் சுகானுபவமாக இருக்கிறது.
அசைவ உணவுகளில் இத்தனை வகைகளா என வியக்கும் வகையில் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இதன் செய்முறைகளைப் படிக்கும்போதே நாவில் நீர் ஊறுவதை தவிர்க்க முடியவில்லை. அடுத்த செய்முறையைப் படிக்கும்முன்பே முதல் பதார்த்தத்தை செய்துவிட மனது பரபரக்கிறது.