ஆழி

தோற்றுப்போனவர்களின் பாடல்கள்
வ.ஐ.ச.ஜெயபாலன்
1000
கொதிக்கும் பூமி
ஆதி வள்ளியப்பன்
104
ரஷோமான்
அகிரா குரோசவா
தி.சு.சதாசிவம்
152
நிசி அகவல்
அய்யப்பமாதவன்
80
முட்டம் - அலைகள் பாறைகள்
சிறில் அலெக்ஸ்
64
டிராகன் - புதிய வல்லரசு சீனா
செ.ச.செந்தில்நாதன்
512
மையம் கலைத்த விளிம்புகள்
அ.ராமசாமி
184

ஓஷியோ புக்ஸ்

வெற்றி A முதல் Z வரை
ஒய்.எஸ்.ராஜன்
பார்த்திபன்
336
பன்றிக் காய்ச்சல் - தப்பிப்பது எப்படி?
கணேஷ் மரியதாஸ்
தியாகச் செம்மல்
176

பேப்பர் போட் புக்ஸ்

சந்திரயான்
பார்த்திபன்
40

உடல் உறுப்பு தானம்

ரூ. 30.00
ஆசிரியர்: 
டாக்டர் அசோகன்
மொழிபெயர்ப்பு: 
சொ. ஞானப்பிரகாசம்
வெளியீடு: 
Aazhi
ரூ. 30.00
பக்கங்கள்: 
48
உடல் உறுப்பு தானம்

2008 ஆம் ஆண்டு விபத்தில் மூளைச்சாவுக்கு உள்ளான தனது மகன் ஹிதேந்திரனின் உடல் உறுப்புகளை தானமாகக் கொடுத்து நாடு முழுவதும் உடல் உறுப்பு தானம் குறித்து மிகப் பெரிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய டாக்டர் அசோகன் எழுதியிருக்கும் புத்தகம். உடல் உறுப்பு தானம் குறித்த எளிய கையேடாக விளங்குகிறது இந்நூல். உடல் உறுப்புகளை தானம் செய்வது எப்படி என்பது முதல் இது குறித்து சட்டம் என்ன சொல்கிறது என்பது வரை விரிவாக விவரித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்றிருக்கிறார் டாக்டர் அசோகன்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம்

ரூ. 30.00
ஆசிரியர்: 
தியாகச் செம்மல்
வெளியீடு: 
Aazhi
ரூ. 30.00
பக்கங்கள்: 
56

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிறப்பு, வளர்ப்பு, சாதனை என அனைத்தையும் எளிமையாக விவரிக்கிறது இச்சிறுநூல். தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்துவது தொடர்பாக எழும் அனைத்து கேள்விகளுக்கும் இந்நூல் பதில் அளிக்கிறது. இந்த சட்டத்தைப் பயன்படுத்தி பெறப்பட்ட பல முக்கியமான தகவல்களும் இணைக்கப்பட்டுள்ளது நூலின் கூடுதல் பலம்.

இரவுகளில் பொழியும் துயரப்பனி

வகை
ரூ. 70.00
ஆசிரியர்: 
தமிழ்நதி
வெளியீடு: 
Aazhi
ரூ. 70.00
ISBN: 
9789380244150
பக்கங்கள்: 
104
இரவுகளில் பொழியும் துயரப்பனி

''இந்த ஆண்டு (2009) ஈழத்தமிழர்களைப் பொறுத்தமட்டில் சபிக்கப்பட்ட ஒன்றாயிருக்கிறது. எதனாலும் எவராலும் இட்டு நிரப்பப்பட முடியாத இழப்புகளை நாம் எதிர்கொண்டிருக்கிறோம். கனவிலும் அசாத்தியம் என்று எண்ணிய கசப்பான பின்னடைவை தமிழீழ விடுதலைப் போராட்டம் வந்தடைந்திருக்கிறது. உன்னதங்கள் மீதான நம்பிக்கை கொஞ்சம் ஆட்டங்கண்டிருக்கிறது. விடுதலை குறித்த எங்களது கனவை, இலங்கைப் பேரினவாத அரசுடன் இணைந்த பல நாடுகளின் கூட்டுச்சதி உருத்தெரியாமல் சிதறடித்துவிட்டது. கிளறும் இடங்களில் எல்லாம் பிணங்களோ எலும்புக்கூடுகளோ தட்டுப்படும் அளவிற்கு வன்னி ஒரு பெரிய இடுகாடாக மாறிவிட்டிருக்கிறது.

சோளி க்கே பீச்சே - பெண்கள் எழுதிய கதைகள்

வகை
ரூ. 80.00
ஆசிரியர்: 
ரவிக்குமார்
வெளியீடு: 
Aazhi
ரூ. 80.00
ISBN: 
9789380244136
பக்கங்கள்: 
128
சோளி க்கே பீச்சே - பெண்கள் எழுதிய கதைகள்

ஒரு படைப்பை மொழிபெயர்க்கும்போது ஒரு மொழியில் ஒரு படைப்பாளி நெய்து வைத்ததைப் பிரித்து மீண்டும் நெய்கிறார் மொழிபெயர்ப்பாளர். அதன் முடிவில் கிடைப்பது மூலத்தின் நகலா? புதிதான ஒன்றா? இரண்டுக்குமே இல்லை என்ற பதிலைத்தான் கூற வேண்டியிருக்கும். மொழியின் மங்கலான, தெளிவற்ற புலத்தில் செயல்படுகிறது மொழிபெயர்ப்பு.

உலகின் வேறுபட்ட நாடுகளை, கலாச்சாரங்களைச் சேர்ந்த பதினொரு பெண்கள் எழுதிய சிறுகதைகள் இங்கே மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கண்ணீரை, புன்னகையை, வேட்கையை - மொழியின், நாட்டின் எல்லைக்கோடுகள் பிரித்துவைக்க முடியாது என்பதை எடுத்துக்காட்டுகின்றன இந்தக் கதைகள்.

 

தமிழராய் உணரும் தருணம்

ரூ. 100.00
ஆசிரியர்: 
ரவிக்குமார்
வெளியீடு: 
Aazhi
ரூ. 100.00
ISBN: 
978-93-80244-11-2
பக்கங்கள்: 
184
தமிழராய் உணரும் தருணம்

தமிழக அரசியல் பற்றிய செய்திகளும், விமர்சனங்களும் இந்நூல் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. இலங்கைக்கு கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்ட வரலாறு, தீக்குளிப்பின் அரசியல், இடதுசாரிகளின் ஈழத் தமிழர் பற்றிய நெறியற்ற மௌனம், தமிழக அரசியல் கட்சிகளின் தேர்தல் சார்ந்த சந்தர்ப்பவாதம், காலந்தோறும் தமிழகத் தமிழர்களின் குரல்களை உதாசீனப்படுத்தும் இந்திய நடுவண் அரசின் போக்கு என்று பல பதிவுகளை இந்நூல் நமக்கு வழங்குகிறது.

துயரத்தின் மேல் படியும் துயரம்

ரூ. 70.00
ஆசிரியர்: 
ரவிக்குமார்
வெளியீடு: 
Aazhi
ரூ. 70.00
ISBN: 
9789380244129
பக்கங்கள்: 
136
துயரத்தின் மேல் படியும் துயரம்

வாசிப்புச் சூழலில் நாம் காண்கிற நிர்கதியான நிலைமை ‘நவீனத்துவம்’ குறித்த விவாதத்தோடு முடிந்துவிடுவதாக இல்லை. மரணத்துக்கு இணையான புதிர்கள் நிறைந்த சமகால சிக்கல்களை நாம் அணுகும் விதங்களில் அது வெளிப்படுகிறது. பிரச்சனைகளை விளங்கிக் கொள்வதைவிடவும், விருப்பத்துக்கு ஏற்ப எதிரிகளை கட்டமைப்பதாக அமைந்துவிடுகின்ற வாசிப்புமுறைகளை எதிர்த்து நாம் இன்று போராட வேண்டியுள்ளது. நமக்குக் கிடைக்கிற பிரதிகளும், வாசிப்பு முறைகளும் இச்சிக்கலை விளங்கிக்கொள்ள உதவ முடியுமா என்பது சந்தேகமாகவே உள்ளது.

நீ உன் மீதே நின்று கொண்டிரு

வகை
ரூ. 40.00
வெளியீடு: 
Aazhi
ரூ. 40.00
பக்கங்கள்: 
64
நீ உன் மீதே நின்று கொண்டிரு

புலரியின் நிர்மால்யத்திலிருந்து வைகறையின் இளவெயில் வரை..... அறுபதுக்கும் மேற்பட்ட கவிதைகள். "ஒரு சொல்லின் தீயை ஒரு சொல்லாலேயே அணைக்கிறார். ஒரு சொல்லை நிகழ்த்து மேடைக்கு அனுப்பி, அதே சொல்லுடன் மேடைக்கு எதிரில் அமர்ந்து ரசிக்கிறார். எதைக் கண்டு பிடிக்கிறாரோ அதை ஒளித்து வைக்கிற முன்விளையாட்டு அவருக்குப் பிடிக்கிறது. உண்மையிடமிருந்து பொய்யையும், பொய்யிலிருந்து உண்மையையும் கற்று, கற்றதையே உண்மைக்கும் பொய்க்கும் கற்பிக்க முற்படுகிறார். உரித்துப் பார்த்துக் கொண்டே போய் ஒன்றுமில்லை என்பதைக் கண்டறிவது அவருக்குப் பிடிக்கிறது. ஏனெனில் ஒன்றுமில்லை என்பதே அவருக்கு எல்லாமாக இருக்கிறது.

எம்.ஜி.ஆர். பேட்டிகள்

ரூ. 100.00
ஆசிரியர்: 
எஸ். கிருபாகரன்
வெளியீடு: 
Aazhi
ரூ. 100.00
ISBN: 
978-93-80244-06-8
பக்கங்கள்: 
208
எம்.ஜி.ஆர். பேட்டிகள்

எம்.ஜி.ஆர். பேட்டிகள் என்ற நூலின் சுருக்கப்பட்ட இரண்டாம் பதிப்பாக இந்நூல் வெளிவருகிறது. நடிகராக புகழின் உச்சியில் இருந்த காலம் முதல் முதலமைச்சராக கோலோச்சிய காலம் வரை பல்வேறு தருணங்களில் எம்.ஜி.ஆர் அளித்த பேட்டிகளும், பதில்களும் தொகுக்கப்பட்டுள்ளன. எம்.ஜி.ஆர். என்ற மகத்தான மனிதரின் மனத்தை அவரது வார்த்தைகளிலேயே அறிந்துகொள்ள ஓர் அரிய வாய்ப்பாக இப்புத்தகம் அமைந்துள்ளது. பத்திரிகையாளர் எஸ். கிருபாகரன் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தேடித்தேடி சேர்த்த அரிய பேட்டிகளின் தொகுப்பு.

தோற்றுப்போனவர்களின் பாடல்கள்

வகை
ரூ. 60.00
ஆசிரியர்: 
வ.ஐ.ச.ஜெயபாலன்
வெளியீடு: 
Aazhi
ரூ. 60.00
பக்கங்கள்: 
1000
தோற்றுப்போனவர்களின் பாடல்கள்

யுத்தம் எல்லா விதத்திலும் அம்மாவைத்தான் பாதிக்கிறது. ஜெயபாலனின் கவிதைகள் அநேகமாக யுத்தத்தினுள் அம்மா பற்றிய ஏக்கம் மற்றும் அதன் பாதிப்பிலிருந்துதான் உருவாயிருக்கின்றன. அம்மாவை நோயாளியாக்கி அலைச்சலையும் இழப்பையும் தோல்வியையும் சுமத்திவிட்டிருக்கிறது. இந்தத் தொகுதியில் இடம்பெறுகிற கூடுதலான கவிதைகள் அம்மா பற்றிய ஏக்கங்களாகவே இருக்கின்றன. ''அம்மாவின் பாடல்களை காலத்தில் எழுதுகிறேன்'' என்ற இவரின் பிரகடனமும் காலம் துயரெரித்து அம்மாவை தின்றது என்ற சோகமும் ‘தோற்றுப் போனவர்களின் பாடல்கள்’ கவிதைகளின் முதன்மையான உணர்வுகள் என்பதை உணர முடிகிறது.

சார்லஸ் டார்வின் - பரிணாமத்தின் பரிமாணங்கள்

ரூ. 80.00
ஆசிரியர்: 
சா.தேவதாஸ்
வெளியீடு: 
Aazhi
ரூ. 80.00
பக்கங்கள்: 
128
சார்லஸ் டார்வின் - பரிணாமத்தின் பரிமாணங்கள்

டார்வின் பிறந்து இருநூறு ஆண்டுகளாவதை ஒட்டி உலகமே கொண்டாடி வருகையில், தமிழில் ஒரு பதிவாவது செய்ய வேண்டும் என்னும் ஆசையில் இந்த நூலை முன் வைத்திருக்கிறார் சா. தேவதாஸ்.