அநேகமாக டிவிட்டரில் எழுதி நூல்வடிவம் பெறும் முதல் தமிழ் நூல் இது. அதுவும் எப்பேர்க்கொத்த நூல்?
140 எழுத்துக்களில் என்னென்ன செய்யலாமோ அத்தனையையும் செய்திருக்கிறார் பேயோன். இன்றைய தமிழ் எழுத்தாளர்கள் மீதான பகடி இலக்கியம் இது. தமிழ்ச் சூழலின் மீதான கிண்டல் விமர்சனநூல் என்றும் இதைச் சொல்லலாம். இந்த நூலில் இடம்பெற்றுள்ள டிவிட்டர் பதிவுகள் இணையத்தில் ஏற்கனவே மிகவும் பிரபலம். யாரய்யா இந்த பேயோன் என்று இன்னமும் மண்டையைப் பிய்த்துக்கொண்டு அலைகிறார்கள் நிறைய பேர். பேயோனுக்கு ரசிகர் மன்றமே அமைத்திருக்கிறார்கள். ஜெயமோகன், பா.ராகவன் போன்றோர் இணையத் தமிழின் அசலான, விசித்திரமான எழுத்து என இதைக் கருதுகிறார்கள்.
பேயோனைப் படிக்கும் அத்தனை பேருக்கும் டன்டன்னாக திகைப்பும் சிரிப்பும் அதிர்ச்சியும் அச்சச்சோவும் கியாரண்டி.