எம்.ஜி.ஆர். பேட்டிகள் என்ற நூலின் சுருக்கப்பட்ட இரண்டாம் பதிப்பாக இந்நூல் வெளிவருகிறது. நடிகராக புகழின் உச்சியில் இருந்த காலம் முதல் முதலமைச்சராக கோலோச்சிய காலம் வரை பல்வேறு தருணங்களில் எம்.ஜி.ஆர் அளித்த பேட்டிகளும், பதில்களும் தொகுக்கப்பட்டுள்ளன. எம்.ஜி.ஆர். என்ற மகத்தான மனிதரின் மனத்தை அவரது வார்த்தைகளிலேயே அறிந்துகொள்ள ஓர் அரிய வாய்ப்பாக இப்புத்தகம் அமைந்துள்ளது. பத்திரிகையாளர் எஸ். கிருபாகரன் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தேடித்தேடி சேர்த்த அரிய பேட்டிகளின் தொகுப்பு.