இந்தியாவின் நிலவுப் பயணத்தை விறுவிறுப்பான நடையில் விவரிக்கிறது இந்நூல். ஸ்ரீஹரிகோட்டாவில் சந்திரயான் ஏவப்பட்ட நிமிடத்தில் இருந்து, நிலவின் சுற்றுவட்டப் பாதையில் பத்திரமாக நிலைநிறுத்தப்பட்ட தருணம் வரை... ஒவ்வொரு நிகழ்வையும் படிக்கும் போது, இஸ்ரோ விஞ்ஞானிக்ளுக்கு இருந்த அதே படபடப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது. உலகிலேயே முதல் முறையாக, முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக நிலவைத் தொட்ட சந்திரயானின் பயணத்தை ஆசிரியர் விவரிப்பதைப் படிக்கும் போது, நாமே நிலவுக்கு சாகசப் பயணம் மேற்கொண்ட அனுபவம் கிடைக்கிறது.