ஆனந்த் நடராஜன்

ta

சொந்த ஊர் இராமநாதபுரம். சேதுபதி அரசு கலைக் கல்லூரியில் இயற்பியலில் இளங்கலைப் பட்டம் முடித்தார்.

1989ல் இந்தியா டுடை தமிழ் பதிப்பில் ப்ரூப் ரீடர் பணியில் சேர்ந்தார். பத்து வருடங்கள் பணிபுரிந்து டெபுடி காப்பி எடிட்டரான பிறகு 2000ல் தமிழ் டாட்காம் என்கிற மின் இதழின் எடிட்டர் இன் சீஃப் பணியில் சேர்ந்தார்.

பிறகு 2001ல் மீண்டும் இந்தியா டுடே இதழில் இதழாசிரியர் பொறுப்பில் சேர்ந்தார். தற்போது இந்தியா டுடே இதழின் எக்ஸிகியூட்டிவ் எடிட்டராக பணிபுரிகிறார்.