பெருங்கடல் என்கிற பொருளைக் கொண்ட ஆழி தமிழ்ப் பதிப்புலகில் மாபெரும் அலைகளை உருவாக்கியவாறே உருவானது. ஆழி பப்ளிஷர்ஸ் தொடங்கிய மூன்றாண்டுகளில் தமிழகமெங்கும், தமிழ் கூறு நல்லுலகமெங்கும் தனது பரப்பை விரிவுபடுத்திக்கொண்டே இருக்கிறது. 2007 ஜனவரியில் ஒரு புத்தகத்தோடு தொடங்கிய பயணம், இப்போது சுமார் 70 புத்தகங்களோடு மெதுவாக என்றாலும் உறுதியாக தொடர்ந்துகொண்டிருக்கிறது.
ஆழி தற்போது மூன்று பதிப்புப் பெயர்களில் தமது வெளியீடுகளை கொண்டுவருகிறது.
பதிப்புத்துறை, ஊடகம், மொழிபெயர்ப்பு, நுண்கலை என பல துறைகளில் அனுபவம் பெற்றோரின் சங்கமமாக விளங்குகிறது ஆழி. அதன் விளைவாக அதன் தேர்வுகளும் படைப்புகளும் சிறப்பானவையாக விளங்குகின்றன. எதை வேண்டுமானாலும் அச்சடித்து விற்றுத்தள்ளிவிடலாம் என்கிற மோசமான போக்கு நிலவும் இன்றைய மாயாஜால தமிழ்ப் புத்தகச் சந்தையில் நூலின் தரத்தை அதன் உருவத்தில் மட்டுமல்ல, உள்ளடக்கத்திலும் உறுதிச்செய்யும் நிறுவனமே ஆழி.
சிறந்த எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் ஆழி எப்போதும் வரவேற்கிறது.
மேலதிக விவரங்களுக்கு எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.