இயற்கையின் ஊடான மனித போதம்
தனது மொழியால் காட்சி உலகில்
ஊடுருவும்போது உண்டாகும்
தன்னிலை சிலிர்ப்புகளை
வியந்து போற்றும் தாரா கணேசனின்
கவிதைகள் ஓடும் நதி போல பல சுழிப்புகளுடன்
நம்மை விரைவாகக் கடக்கின்றன.
நினைவுக்கும் அ-நினைவுக்கும் இடையே
தறியோட்டம் கொள்ளும் இம்மொழி
தீர்க்கமான காமத்துக்கும்
அதன் செவ்வியல் பண்புக்கும் இடையே
நெகிழ்ந்து நிற்கும் அழகியலை
ஒப்புக்கொடுக்கிறது.
படிமச் சிக்கல்கள் ஏதுமற்ற, எளிய,
நேரடி வாசிப்புக்கு ஆதரவான இக்கவிதைகள்
சிலவற்றில் உடல் மொழியின்
தீவிர உயிராற்றலையும் நாம் உணரலாம்
- யவனிகா ஸ்ரீராம் -