சமுதாயத்தால் ஒதுக்கப்படும் நோயின் தாக்கத்தையும், அதன் விளைவினையும் எதிர்கொள்ள வயதோ, கால அவகாசமோ எதுவுமின்றி, தனக்கு அமைத்துத் தரப்பட்ட வாழ்க்கையை, வாய்ப்பை, வசதியை முழுமையாகப் பயன்படுத்தி, முன்னுக்கு வந்த முத்துமீனாளை பாராட்டத் தோன்றுகிறது. தனக்கும், தன்னைத் சுற்றி உள்ளோருக்கும் ஏற்படும் மாற்றங்களை, நிகழ்வுகளை மிக உன்னிப்பாகக் கவனித்து அவற்றைப் பதிவுசெய்துள்ள எளிமையும் நேர்மையும் நிறைந்த நாவல் இது.