சீனா இன்று உலகின் மிகப்பெரிய வல்லரசுகளில் ஒன்று. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவைப் போலவே ஏழைத் தேசமாக இருந்த சீனா, இன்று முதல் உலக நாடுகளை வென்று எல்லோரையும் அதிர்ச்சியிலும் அச்சத்திலும் ஆழ்த்தியிருக்கிறது. பொருளாதார முன்னேற்றத்துக்காக அது செய்த சாதனைகளையும் பெற்ற வேதனைகளையும் ஆதாரபூர்வமாக விளக்குகிறது இந்த நூல். பண்டைய சீனா, காலனிய சீனா, கம்யூனிஸ்ட் சீனா என சீனாவின் முழு வரலாற்றையுமே சித்தரிக்கும் இந்த நூல், டெங் ஷியாவ்ப்பிங் காலத்துக்குப் பின்னால் சிலிர்த்தெழுந்த நவீன சீனாவை விலாவரியாக, வியப்பும் விமர்சனமும் கலந்து படம்பிடித்துக் காட்டுகிறது.