தன் எண்ணங்களையும் அபிப்பிராயங்களையும் முடிவுகளையும் சந்தேகங்களையும் பரிசீலனைகளையும் ஆய்வுகளையும் 5000 பக்கக் காகிதங்களில், இடமிருந்து வலமாக, புதிர்ப் புதையலாக விட்டுச்சென்றுள்ளார் லியோனார்டோ. அறிவியல் பரிசீலனையாக, ஓவிய ஆலோசனையாக, இவை விரிந்து செல்கின்றன. பதிவுகளாக, கவிதைத் தெறிப்புகளாக, செறிவு வாசகங்களாக, கட்டுக்கதைகளாக, உருவக்க கதைகளாக, வேடிக்கைக் குறிப்புகளாக வடிவம் கொள்கின்றன.