பங்கு சந்தையை கதை வடிவுக்குள் சிக்க வைக்காமல், ஒரு அனுபவம் தலந்த கட்டுரைத் தொகுப்பாகவே எழுத முயன்றுள்ளேன். 1993 முதல்... (வணிகப் பத்திரிகைத் துறையில் அடியெடுத்து வைத்த நேரம்) இன்றுவரை... ரு பத்திரிகையாளனாகவும், பார்வையாளனாகவும், இடையிடையே பங்கு முதலீட்டாளராகவும் இருந்து கற்றுக் கொண்டவைதான் இந்தப் புத்தகம் எழுதப் பயன்பட்டுள்ளது. இக்காலகட்டத்தில் நான் சந்தித்த, பார்த்த... கேட்ட பல விஷயங்களைத் தேவையான இடங்களில் குறிப்பட்டிருக்கிறேன். இதில் பலவும், சிறு முதலீட்டாளர்கள் எப்படியெல்லாம் ஏமாறுகிறார்கள் என்பது குறித்துதான்.